search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரி சோதனை"

    • வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.
    • நகை கடைகளில் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் நகை கடையும், வந்தவாசி சாலையில் பிரபலமான நகைக்கடையும் உள்ளன.

    இந்த கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மற்றும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகpe நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதா? நகை கடையில் வருமான வரி முறையாக கட்டப்பட்டுள்ளதா? வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.

    நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நீடித்தது. நகரின் முக்கிய நகை கடைகளில் திடீர் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது
    • குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். இந்த பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை ஆகியவையும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதே நாளில் சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளும் சென்னை மாநகரை குறி வைத்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள் சிலரை குறி வைத்து அவர்களது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக விரைவில் பெரிய அளவிலான மெகா சோதனையை நடத்த அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனையை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் இந்த சோதனையை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தேர்தல் நேரத்தில் இது போன்ற சோதனைகளை நடத்துவதன் மூலமாக பாராளுமன்ற தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பு உருவாகும் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் அவ்வப்போது நடைபெறும் அமலாக்கத்துறை, வருமானவரி துறை சோதனைகளே பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் பெரிய அளவில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையை நடத்தினால் அது தேர்தல் களத்திலும் நிச்சயம் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது எப்போதுமே சோதனைகள் என்பது ஏதாவது ஒரு கண்ணோட்டத்தில் நடத்தப்படுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அதே நேரத்தில் குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை. இதற்கு முன்பும் பலமுறை ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா சோதனை என்பது நடத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் எந்தவித திட்டமிடலும் இல்லாமலேயே ஒவ்வொரு முறையும் திடீரென சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    • சென்னையில் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 30 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை அண்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சென்னை எழும்பூரில் உள்ள இன்னொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

    எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதே போன்று செனாய் நகர், அமைந்தகரை உள்பட 10 இடங்களிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்து வருகிறது. இதன் முடிவிலேயே வரி ஏய்ப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    • நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகை இதுவாகும்.
    • தீரஜ் சாகுவின் செயலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேல்சபை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    தீரஜ்குமார் சாகு தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரிய அளவில் மதுபானங்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனமும் ஒன்று.

    பால்டியோ சாகு குழுமத்தினர் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, ஒடிசாவின் சம்பல் பூர், ரூர்கேலா, பொலாங்கிர், சுந்தர்கர் மற்றும் புவனேஸ் வரில் இந்த குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும், தீரஜ்குமாருக்கு சொந்தமான இடங்களிலும், மேற்கு வங்கத்தில் உள்ள அலுவல கங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    கடந்த 4 தினங்களாக வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று 5-வது நாளாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பணக் குவியல்களை காண முடிந் தது. இதுவரை 176 பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஒடிசாவின் பொலாங்கிரில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டு எண்ணப்பட்டன. பெரும்பாலும் ரூ.500 கட்டுகளாக இருந்தன. தொடர்ந்து பணத்தை எண்ணியதால் பணம் எண்ணும் எந்திரங்கள் சேதமடைந்தன.

    இதனால் பல வங்கிகளில் இருந்து எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு விடிய, விடிய எண்ணப்பட்டன. பணத்தை எண்ண முடியாமல் வருமானவரி அதிகாரிகள் திணறினார்கள்.

    இதுவரை ரூ.300 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. 3 இடங்களில் 7 அறைகள் மற்றும் 9 லாக்கரில் இன்னும் எண்ணப்படவில்லை. அலமாரிகள் மற்றும் நாற்காலிகளில் இந்த பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல இடங்களில் நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் பறிமுதல் செய்யப் படும் பணத்தின் மொத்த மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    ரூ.350 கோடி வரை சிக்கும் என்று எதிர்பார்ப்ப தாக வருமானவரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகை இதுவாகும். இதனால் பணக் குவியலை பார்த்த அதிகாரிகள் திகைத்துவிட்டனர்.

    இந்த சோதனையில் வரு மானவரித்துறை அதிகாரி கள் 150 பேர் ஈடுபட்டனர். ஐதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வர வழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சோதனையிடுகின்றனர். சோதனையின்போது ரூ.500 நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடந்தன. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே தீரஜ் சாகுவின் செயலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, "தீரஜ் சாகுவின் வணிகங்களுடன் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை" என்றார்.

    • சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
    • வீட்டில் உள்ள லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த 5 நாளாக வருமான வரிச்சோதனையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த சோதனையானது கோவையிலும் நீடிக்கிறது. கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்குள்ள அவரது மகன் ஸ்ரீராம் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகம் மற்றும் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

    இதில் மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீட்டில் நடந்த சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது.

    மீனா ஜெயக்குமார் வீடு உள்பட மற்ற இடங்களில் நேற்று 4-வது நாளாக சோதனை நீடித்தது.

    மீனா ஜெயக்குமாரின் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

    மேலும் அவர்களது வீட்டில் உள்ள லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக அவரது வீட்டில் சோதனையானது நீடிக்கிறது. இந்த சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவர்களிடம் விசாரணை நடத்தவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    அங்கு 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்குள்ள ஆவணங்கள், லேப்-டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர். அதில் உள்ள விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 5-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.

    கள்ளிமடையில் உள்ள காசாகிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டில் 4 நாட்களாக நடந்த வருமானவரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.

    • காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடந்தது.
    • எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல்.

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

    சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கிண்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சிறப்பு விருந்தினர் மாளிகையில் கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை.

    இது தவிர காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடந்தது. மேலும் கோவையில் உள்ள அமைச்சரின் நெருக்கமான பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

    எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    எனினும் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடாமல் இருந்தது.

    இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • வருமான வரி சோதனையில் போலி ரசீதுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.
    • ரூ.25 கோடிக்கு போலியான கட்டண சலுகை வாங்கியது கண்டுபிடிப்பு.

    சென்னையில் சவீதா கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நடைபெற்றது.

    இந்நிலையில், வருமான வரி சோதனையில் போலி ரசீதுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில், கணக்கில் காட்டாத ரூ.400 கோடி அளவிலான ரசீது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ரூ.25 கோடிக்கு போலியான கட்டண சலுகை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து அனல் மின் நிலையத்துக்கு தேவையான மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது.
    • அதிகாரிகள் சோதனை முடித்து வெளியே வந்தால்தான் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்று தெரியவரும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு இன்று காலை வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் திடீரென வந்தனர். பின்னர் அவர்கள் அனல் மின்நிலையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து அனல் மின் நிலையத்துக்கு தேவையான மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே அந்த மின் உபகரணங்கள் தரமானதா என்றும் அவற்றின் விலை குறித்தும் வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் அனல் மின்நிலையம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்காமல் சம்பளம் ஒதுக்கி முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுதொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அனல் மின்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சோதனை முடித்து வெளியே வந்தால்தான் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்று தெரியவரும்.

    • 2 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2017-2018-ம் நிதி ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முறைகேடு கண்டறியப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.30 லட்சத்துக்கும் மேல் உள்ள பத்திரப்பதிவுகள் தொடர்பாக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

    வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்ட பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் அதுபோன்ற பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதன் மூலம் பெரிய அளவிலான தொகை கைமாற்றப்பட்டு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை அடுத்த செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் ஆகிய 2 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றிருப்பதை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கண்டுபிடித்தது.

    இதையடுத்து இந்த 2 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு பத்திரப்பதிவில் முறையாக கணக்கு காட்டப்படாததும் தெரிய வந்தது. இதில் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் 2 ஆயிரம் கோடிக்கு மேல் பத்திரப்பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    2017-2018-ம் நிதி ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த முறைகேடு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து இந்த முறைகேட்டுக்கு காரணமாக செங்குன்றம், உறையூர் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. இருவர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் 2 சார்பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கும் உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

    • முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
    • செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறுகிறது.

    தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாகவும், விதிகளுக்கு புறம்பாக பத்திரப்பதிவு செய்ப்படுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலக வருவாய் தொடர்பான கணக்குகளை கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர்.

    அவ்வகையில் சென்னை அருகே உள்ள செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம், திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 17 மணி வரை நீடித்த இந்த சோதனையில், சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் கணக்கு காட்டவில்லை எனவும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டவில்லை என்றும் வருமானவரி நுண்ணறிவு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    வட சென்னை பகுதியிலேயே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறுகிறது. செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. பத்திர பதிவு நடைபெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி உள்ளனர்.

    • செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
    • தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வட சென்னை பகுதியிலேயே அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறும் அலுவலகமாக செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் இருந்து வருகிறது.

    செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இதனால் தினமும் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் பத்திர பதிவு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதுபோன்று பத்திர பதிவு நடைபெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. இதில் பத்திரபதிவு அலுவலகத்தில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 17 மணி நேரம் நடைபெற்ற சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சோதனை காரணமாக செங்குன்றம் பகுதியில் விடிய விடிய பரபரப்பு நிலவியது.

    இதே போன்று தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே எல்லீஸ் சத்திரம் சாலையில் எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளது.
    • வயல்வெளிகளில் வீசப்பட்டிருந்த எம்.ஜி.எம். குழும நிறுவனத்துக்கு சொந்தமான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    விழுப்புரம்:

    வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக தமிழகம் முழுவதும் எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்தினர்.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே எல்லீஸ் சத்திரம் சாலையில் எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று நடந்த சோதனையின்போது பணியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து ஆவணங்களும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒருசில முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    இந்த நிறுவனத்துக்கு சாமியடி குச்சிப்பாளையம் பகுதியில் இருந்து மூலப்பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. அங்கும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை விடிய விடிய நடத்தப்பட்டது.

    இன்று 2-வது நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம். குழும நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    சோதனையின்போது யாரும் அனுமதிக்கப்படவில்லை. அப்போது நடந்த விசாரணையில் விழுப்புரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சமாதேவி என்ற இடத்தில் உள்ள வயல்வெளியில் ஆவணங்கள் வீசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

    அதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 3 கார்களில் சென்றனர். வயல்வெளிகளில் வீசப்பட்டிருந்த எம்.ஜி.எம். குழும நிறுவனத்துக்கு சொந்தமான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஆவணங்களின் முழு விபரங்களை தெரிவிக்க வருமான வரித்துறையினர் மறுத்துவிட்டனர்.

    இந்த ஆவணங்களை வீசி சென்றது யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×